திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. காலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், மாலை 4:00 மணிக்கு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபி ஷேகமும், தீபராதனையும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மங்களாம்பிகை, கிருபாபுரீஸ்வரர் தம்பதி சமேதராக அலங்கரிக்கப்பட்டு கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர்.