மயிலம்: ஆலகிராம எமதண்டீஸ்வரர் கோவிலில் மூலவர், திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை வழிபாடுகள் நடந்தது. திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்திலுள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மயிலம், கொல்லியங்குணம், நெடி மோழியனூர், பாதிராபுலியூர், பெரும்பாக்கம் சிவன் கோவில் களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.