வேலாயுதம்பாளையம்: மார்கழிமாத முதல் வெள்ளியை முன்னிட்டு, வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு, ஆண்டாள் அலங்காரத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மகா மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர் குங்குமம், திருமஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு, பூக்களால் ஆண்டாள் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.