பதிவு செய்த நாள்
23
டிச
2014
11:12
திருப்பூர் : திருப்பூர், மேட்டுப்பாளையம் ராமையா காலனியில் உள்ள ஸ்ரீகொண்டத்து வீரபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
குண்டம் திருவிழா, கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 20ல், அம்மன் அழைத்தல், குத்துவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தன. 21, மாலை 6:00 மணிக்கு மஞ்சள் அலங்காரம் மற்றும் குண்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தன.நேற்று காலை 6:00 மணிக்கு, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. முதலில், அருளாளியும், கோவில் பூசாரிகளும் குண்டம் இறங்கினர். 15 அடி நீளம், வேல் மற்றும் திரிசூலம் கொண்ட அலகு குத்தி, ஒரு பக்தர் குண்டம் இறங்கினார். குழந்தைகளுடன் பெண்கள், ஆண்கள் என 300க்கும் மேற்பட்டோர் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.