Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவதியம்மன் கோயில் தேரோட்டம் ... தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான் வீதி உலா! தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமாரகோவில் முருகன் கோயிலில் இன்று ஆறாட்டு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2011
12:06

தக்கலை : குமாரகோவில் முருகன் கோயிலில் தேரோட்டம் நடந்தது. இன்று(13ம் தேதி) ஆறாட்டு நடக்கிறது. குமாரகோவில் வேளிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ஒரு தேரிலும், விநாயகர் இன்னொரு தேரிலும், அமர்ந்து வீதி உலா வந்தனர். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷ முழக்கத்தோடு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் திருவிழாக்குழு தலைவர் குமரி ரமேஷ், செயலாளர் சுனில் குமார், பொருளாளர் செந்தில், பா.ஜ., இளைஞரணி துணை தலைவர் விஜயகுமார், வேல்முருகன் சேவா சங்க தலைவர் டாக்டர் சுகுமாரன், கோயில் கண்காணிப்பாளர் நிர்மல் குமார், மேலாளர் சிவகுமார் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை திருவிளக்கு பூஜை, பஜனை, சமயமாநாடு நடந்தது. சமயமாநாட்டிற்கு விழாக்குழு தலைவர் குமரி ரமேஷ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆண்டிப்பிள்ளை முன்னிலை வகித்தார். செயலாளர் சுனில்குமார் வரவேற்றார். இந்து கல்லூரி பேராசிரியர் அய்யப்பன், பள்ளி ஆசிரியர் ரமேஷ் பேசினார். தொழிலதிபர் அழகிமணி, முன்னாள் திருவிழாக்குழு தலைவர் தங்கப்பன், பேட்ரன் பிரசாத் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு இலவச நோட்புக் வழங்கினர். பொருளாளர் செந்தில் நன்றி கூறினார். இரவு கதாபிரசங்கம் நடந்தது. இன்று காலை 9 மணிக்கு கோயில் தெப்ப குளத்தில் சுவாமிகளுக்கு ஆறாட்டு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் விழாக்குழு இணைந்து செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar