Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காமாட்சியம்மன் கோவிலில் திருவாதிரை ... மாகாளியம்மன் கோவிலில் வரும் 6ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க காய்கறி, அரிசி அனுப்பி வைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2015
12:01

திருப்பூர் : சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, 4 டன் காய்கறி,6 டன் அரிசி உள்ளிட்டவை, திருப்பூரில் இருந்து நேற்று அனுப்பப்பட்டன. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, பக்தர்கள் இணைந்து, தேவசம் போர்டு அனுமதியுடன், "சாது ஜன சகாய சங்கம் உருவாக்கினர். கடந்த 3 ஆண்டுகளாக, இச்சங்கத்தின் கேரள பக்தர்கள் சார்பில், நிலாக்கல் பகுதியில் அன்னதானம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் முதல்முறையாக, நடப்பாண்டு, திருப்பூரில் சாது ஜன சகாய சங்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக ராமசங்கரலிங்கம், துணை தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ரவிச்சந்திரன், இணை செயலாளர் ரவிச்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிலாக்கல் பகுதியில், வரும் 16 வரை, அன்னதானம் வழங்கப்படும். அதற்காக, காய்கறி, அரிசி, மளிகை பொருட்கள் சேகரிக்கப்பட்டு, நேற்று அனுப்பி வைக் கப்பட்டன. தக்காளி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், உருளை கிழங்கு என 7 வகை காய்கறிகள் 4 டன்; அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் 6 டன் லாரியில் கொண்டு செல்லப்பட்டன. திருப்பூர் காலேஜ் ரோடு ஐயப்பன் கோவிலில் இருந்து புறப்பட்ட லாரியை, ரோட்டரி பூபதி நண்பர்கள் அமைப்பு தலைவர் பத்மநாபன், வடக்கு ரோட்டரி தலைவர் ரத்தினசாமி, ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் பலராமன் மற்றும் ஐயப்பன் கோவில் நிர்வாகிகள், கொடியசைத்து வழியனுப்பினர். இவை, 360 கி.மீ., தூரத்தில் உள்ள நிலாக்கல் பகுதியை, இன்று மதியம் சென்றடையும். சாது ஜன சகாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், "50 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க தேவையான உணவு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப, தொடர்ந்து காய்கறி உள்ளிட்டவை அனுப்பப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar