Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மன் கோவிலில் இருமுடி விழா! நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் ஆருத்ரா சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2015
12:01

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, சிவன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது.

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், அருங்குளம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று, ஆருத்ரா அபிஷேகம் மற்றும் சிறப்பு தரிசனம் நடந்தது. காலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை அமைத்து, கணபதி ஹோமம், காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இரவு 7:00 மணிக்கு, உற்சவ பெருமான் சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா வந்து அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு, ஆருத்ரா அபிஷேகம் நடந்தது. இதில், அருங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

நகரி: நகரி டவுனில் அமைந்துள்ள, காமாட்சி சமேத கரகண்டேஸ்வர சுவாமி கோவிலில், நடராஜ பெருமான் சன்னிதியில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று இரவு 8:00 மணி முதல், நள்ளிரவு 11:45 மணி வரை, சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சிவகாம சுந்தரி சமேத நடராஜ சுவாமிக்கு, வாசனை திரவியங்கள், 30 வகையான பழங்களால் அபிஷேகம், அர்ச்சனை நடத்தப்பட்டது. இன்று, காலை 7:00 மணி முதல், கோவில் பிரகாரத்தில் நடராஜ சுவாமி, தாயார் சிவகாம சுந்தரி உடன் மாணிக்க வாசகர் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நேற்று இரவு நடந்த அபிஷேக விழாவில், நகரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புத்துார்: புத்துார் டவுனில் அமைந்துள்ள, சதாசிவலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, நடராஜ சுவாமி, மூலவர் சன்னிதியில் சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. இரவு, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல், நாராயணவனம் அடுத்த, கீளகரம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலிலும், ருத்ராவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar