Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகின் முதல் நடராஜர் கோயிலில் ... ராமேஸ்வரம் கோயிலில் விடிய, விடிய அபிஷேகம்! ராமேஸ்வரம் கோயிலில் விடிய, விடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடாரண்யேஸ்வரர் கோவிலில் திருவாதிரை அபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஜன
2015
10:01

திருவாலங்காடு: திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, ஆருத்ரா அபிஷேகத்தை முன்னிட்டு, 33 வகையான அபிஷேகங்கள் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், மார்கழி திருவாதிரையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு கோவில் பிராகாரத்தில் உள்ள ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு, ஊர்த்துவ தாண்டவ உற்சவ மூர்த்தி எழுந்தருளினார். அங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில், இரவு, 9:30 மணிக்கு விபூதி அபிஷேகத்துடன் திருவாதிரை அபிஷேகம் விழா துவங்கியது. மொத்தம், 33 வகையான அபிஷேகங்கள், நேற்று அதிகாலை, 4:00 மணி வரை நடத்தப்பட்டன. இரவு முழுவதும் திருமுறை விண்ணப்பம் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தன.

அதிகாலை, 4:30 மணிக்கு, ஊர்த்துவ தாண்டவ பெருமானுக்கு சர்வ அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, ஊர்த்துவ தாண்டவர், ஆலமர பிரகாரத்தை வலம் வந்து, கோபுர தரிசனத்திற்கு வந்த பின், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று மதியம் 1:00 மணியளவில், அனுக்கிரக தரிசனம் நடந்தது. இந்த கோவிலில், கடந்த ?? ஆண்டுகளாக, ஊர்த்து தாண்டவருக்கு, தொடர்ந்து அபிஷேகம் செய்து வருகிறார், சுப்ரமணியம் குருக்கள்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: இந்த கோவிலில், சித்திரை திருவோணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, பங்குனி உத்திரம், மார்கழி திருவாதிரை என, ஆறு அபிஷேகங்கள் நடக்கின்றன. அவை அனைத்தையும், இன்று வரை நான் தான் நடத்தி வருகிறேன். மற்ற பூஜைகளை, என் மகன் சபாரத்தினம் செய்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar