திருப்பதி: திருமலையில் மெலோட்உற்சவம் எனப்படும் படிபூஜை திருவிழா நடந்தது. வருடத்திற்கு மூன்று முறை நடக்கும் இந்த படிபூஜை திருவிழா 5ம் தேதி காலை 5 மணிக்கு நடந்தது. இதில் தமிழ்நாடு கர்நாடகா மற்றம் ஆந்திரா மாநில பக்தர்கள் உள்பட மூவாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அலிபிரியில் படியை கழுவி பூஜை செய்தபின் முக்கிய படிகளை கழுவியும் பொட்டுவைத்து பூஜையும் செய்தபடி சென்றனர்.