Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விற்பனைக்கு வந்தது கோவில் கோபுரம்! திருச்செங்கோட்டில் நவீனகோழி ஜல்லிக்கட்டு விழா திருச்செங்கோட்டில் நவீனகோழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் அனைத்து கண்காணிப்பு கேமராக்களும்...அவுட்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஜன
2015
11:01

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் கார் பார்க், அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்த 14 கண்காணிப்பு கேமராக்களும் பழுதாகி விட்டதால், பக்தர்களிடம் தொடர் திருட்டு நடந்து வருகிறது. அவற்றை தடுக்க முடியாமல், போலீசார் திணறுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் 300க்கு அதிகமான வேன், கார்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை கோயிலுக்கு சொந்தமான ‘கார் பார்க்’கில் நிறுத்துகின்றனர். பாது காப்பு கட்டணமாக காருக்கு ரூ. 10, வேனுக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது. போலீசார் உத்தரவால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘கார் பார்க்’கில் 12 கண்காணிப்பு கேமராக்களை கோயில் நிர்வாகம் பொருத்தியது. இங்கு 4 செக்யூரிட்டிகள் பணியில் இருந்தும், மர்ம நபர்கள் கார்களின் கண்ணாடி களை உடைத்து செல்போன், பணம், நகைகளை திருடுவது தொடர் கதையாக உள்ளது. இதே போல் அக்னி தீர்த்த கடற்கரையில் சுற்றித்திரியும் திருடர்கள், கடலில் நீராடும் பக்தர் களின் கைப்பைகளை திருடுவதும் தொடர்கிறது. இதனால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், பக்தர்கள் பரிதவிக்கின்றனர். தொடர் திருட்டை தடுக்க, ஓராண்டுக்கு முன்பு அக்னி தீர்த்த கரையில் 2 கண் காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தி இருந்தனர். ஆரம்பத்தில் பம்பரமாக சூழன்ற

கேமராக்கள், நாளடைவில் பராமரிப்பின்றி பழுதாகி விட்டதால் திருடர்களின் பிடியில் அக்னி தீர்த்த கரை சிக்கி விட்டது.திருடர்கள், அனைத்து கேமராக்களிலும் பதிவு ஆகாமல் சாமர்த்தியமாக தப்புவது, போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அக்னி தீர்த்த கரையில் முடங்கிய கேமராவை செயல்படுத்தி, கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். ‘கார் பார்க்’கில் இன்னும் அதிக கேமராக்களை பொருத்தி, வீடியோ மானிட்டரை கண்காணிக்க தனி ஊழியரை நியமித்து, கோயில் செக்யூரிட்டி காவலர்களுடன், தமிழ்நாடு சிறப்பு படை போலீசாரையும் ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் இதற்கு எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவிட வேண்டும். இதையும் மீறி திருடு போகும் பொருட்களுக்கு, பணியில் உள்ள செக்யூரிட்டிகள், கோயில் ஊழியர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar