பதிவு செய்த நாள்
02
பிப்
2015
12:02
திருப்பதி:திருமலையில், இணைய தளம் மூலம் மாதந்தோறும் தலைமுடி விற்கப்படும், என,
தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.
ரகம் வாரியாக...இதுகுறித்து, அவர் கூறியதாவது:திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள்
காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை சுத்தம் செய்து, ரகம் வாரியாக பிரித்து, இணையதளம் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது. இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு, பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
அதே நேரத்தில், ஒவ்வொரு மாதமும் ஏலம் நடத்தினால், தலைமுடியை இருப்பு வைக்காமல்
முழுவதும் விற்பனை செய்ய முடியும். இதனால், ஒப்பந்ததாரர் இடையில், தலைமுடி யின் தேவையை அதிகரித்து, அவற்றை உடனுக்குடன் விற்பனை செய்ய முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
கூடுதல் லட்டு:வைகுண்டம் காத்திருப்பு அறையில், ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு, 20 ரூபாய் விலையில், தேவஸ்தானம், இரண்டு லட்டு களை வழங்கி வருகிறது. இன்று முதல், 50 ரூபாய் விலையில், கூடுதலாக இரண்டு லட்டுகள் அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.