பதிவு செய்த நாள்
04
பிப்
2015
12:02
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம், சோளீஸ்வரர் கோவிலில், உலக மக்களின் நலன் வேண்டி, மகா சண்டி யாகம் நடந்தது.
கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் உள்ள காமாட்சி உடனாய சோளீஸ்வரர் கோவிலில், உலக நலன் வேண்டி, மகா சண்டி யாகம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு துவங்கிய மகா சண்டி யாகம், பிற்பகல் 1:30 மணிக்கு முடிவடைந்தது. இதில், தாம்பரம் அடுத்த, செயம்பாக்கம் தசம மகா பீடத்தின் மடாதிபதி மற்றும் சுவாமிகள் கலந்து கொண்டு, உலகத்தில் அமைதியை நிலை நாட்டவும், மக்கள் மன நிம்மதியுடன் வாழ வேண்டியும், மகா சண்டி யாகம் நடத்தினர். அதன்பின், சோளீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தன.