நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் வள்ளலார் திருஉருவப்படஊர்வலம் நடந்தது. நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கத்தில்உள்ள ராமலிங்க சுவாமி மடத்தில் தைப்பூச திருவிழா அகவல் பாராயணத்துடன் துவங்கியது. கடந்த 2ம்தேதி சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
நேற்று முன்தினம் காலை ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வள்ளலார் திருஉருவப்படத்தை அகவல் பாராயணம் பாடியபடி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அன்னதான நிகழ்ச்சியை கவுன்சிலர் ராஜாராம் துவக்கி வைத்தார். மாளிகைமேடு பள்ளி மாணவர்களின் யோகா நிகழ்ச்சி நடந்தது. புண்ணியர் பேரவை ஆன்மிக அறக்கட்டளையைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் அம்சா பாஸ்கரன் பங்கேற்றனர். நெல்லிக்குப்பம் கடைத்தெருவில் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.