Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடலூரில் இன்று திரு அறை தரிசனம்! பழநி செல்லும் பக்தர்களை பாதுகாக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2015
12:02

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், இன்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி
நடைபெறுகிறது.

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 20ம் தேதி,
கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று மாலை, 6:30 மணிக்கு, சித்திரத்தேர் வடம் பிடித்தல், அம்மன் தேர் வீதி உலா வந்தது. நேற்று இரவு, 10:00 மணிக்கு தேர் குண்டம் மைதானத்துக்கு வந்தது. அங்கு, விடிய விடிய, குண்டத்தில் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அதிகாலை அம்மன் அருளாளிகள், முறைதாரர்கள், கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்டவர்களால் ஆனைமலை உப்பாற்றங்கரைக்கு சென்று, சிறப்பு பூஜை செய்து, பேழைப்பெட்டி எடுத்து வரப்படுகின்றது.

இன்று காலை 8:30 மணிக்கு, குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தலைமை முறைதாரர்
மனோகரன் முதலில் குண்டம் இறங்கியதும், அருளாளிகள் இறங்குவர். தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். இதற்கென, மயான பிடிமண்ணை கொண்டு, 52 அடி நீளத்தில், 11 அடி அகலத்தில் குண்டம் கட்டப்பட்டுள்ளது. நான்கு பகுதிகளிலும் அம்மனின் சிங்க வாகனம் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. மருத்துவக்குழுவினரும், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

வால்பாறை டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையில், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 300 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவில் உதவி ஆணையர் கார்த்திக் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். குண்டம் திருவிழாவுக்காக, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar