தூத்துக்குடி: திருச்செந்தூரில், மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்திலும், கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட தினத்திலும் என ஆண்டுக்கு இருமுறை வருஷாபிஷேகம் நடக்கும். தை மாதம் உத்திர நட்சத்திரத்தில் மூலவர் பிதிஷ்டை செய்யப்பட்டார்.
அந்த தினமான இன்று வருஷாபிஷேகம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4.30 க்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.புனித நீர் எடுத்து வரப்பட்ட கும்ப கலசங்களுக்கு, காலை 7 மணிக்கு மகா மண்டபத்தில் சிறப்பு பூஜை நடந்தது. 8.30 மணிக்கு, கும்ப கலசங்கள் கோயில் விமானங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, புனித நீர் அபிஷேகம் நடந்தது. அதன் பின்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜையும், தீபாரதணையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.