சேத்தூர்:சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது. மாலையில் கும்ப அலங்காரம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜைகள்,தீபாராதனை நடந்தது.
இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. நாளை( பிப். 8)காலை 4 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 9 மணிக்கு மாரியம்மன், கற்பகசுந்தரவிநாயகர், பாலவிநாயகர், செல்வகணபதி கோயில்களில் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து கொடியேற்றப்பட்டு தீபராதனை, அன்னதானம் நடைபெறும். மாலையில் முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.