பதிவு செய்த நாள்
09
பிப்
2015
12:02
அச்சிறுப்பாக்கம்: அலமேலுபுரம் கிராமத்தில் உள்ள பிரசன்ன மற்றும் சீனிவாசபெருமாள் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
அச்சிறுபாக்கம் அடுத்த, அலமேலுபுரம் கிராமத்தில், புதிதாக கட்டப்பட்ட பிரசன்ன சீனிவாசபெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, கடந்த 6ம் தேதி காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், மாலை 5:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜை, மூல மந்திர ஹோமங்களும், இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனையும், 7ம் தேதி காலை 7:30 மணிக்கு கோபூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:30 மணிக்கு மூன்று கால பூஜையும் நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள், 8:30 மணிக்கு கும்பங்கள் புறப்பாடும், தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடந்தன. பின் கருவறையில் உள்ள பிரசன்ன மற்றும் சீனிவாச பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடந்தன. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.