பதிவு செய்த நாள்
09
பிப்
2015
12:02
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சகாதேவன்பேட்டை பாலமுருகன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. மறுநாள்7ம் தேதி லஷ்மி மற்றும் கோ-பூஜைகளும், பூர்ணாஹூதியும் நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, சபர்சாஹூதி மற்றும் மகாபூர்ணாஹூதி நடந்தது. காலை 8:30 மணிக்கு கடம் புறப்பாடாகி பாலமுருகன் மற்றும் பரிவாரமூர்த்திகள் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றினர். இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.
இதில் ஒன்றிய சேர்மன் விஜயாசுரேஷ்பாபு, கணபதி, சீனிவாசன், ராமகிருஷ்ணன், சண்முகம், மாணிக்கவேல், ராமானுஜம், ராதாகிருஷ்ணன், முத்துக்குமரன், இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.