அவிநாசி : கருமாபாளையம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
அவிநாசி அருகே கருமாபாளையத்தில் விநாயகர், மாகாளியம்மன், கருப்பராயன் மற்றும் மகாமாரியம்மன் கோவில்களில் திருப்பணி நிறைவுற்று, கும்பாபிஷேக பூஜை கடந்த 6ல் துவங்கியது. நேற்று காலை 8:15க்கு கோபுர கலசங்கள், மூலவ மூர்த்திகளுக்கு ஏக காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கூனம்பட்டி ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமை வகித்து, பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார். புக்கொளியூர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் முன்னிலை வகித்தார். கும்பாபிஷேக சர்வசாதக பூஜை, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலை சேர்ந்த ஆரூர சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.