விழுப்புரம்: விழுப்புரம் காகுப்பம் ஏரிக்கரை ஸ்ரீமயிலாரு அம்மன் பொங்கல் திருவிழா நடந்தது. விழுப்புரம் காகுப்பம் திருக்குறிப்புத் தொண்டர் நகரில் வசிக்கும் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் காகுப்பம் ஏரிக்கரை மேட்டில் அமைந்துள்ள ஸ்ரீமயிலாரு அம்மனுக்கு பொங்கல் திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று மதியம் 3:00 மணியளவில் காகுப்பம் அய்யனார் கோவில் அருகில் அம்மனுக்கு பொங்கல் வைத்தனர். பின்னர், சலவை தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு பொங்கல் படையலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது.
விழா ஏற்பாடுகளை சண்முகம், பழனி, பிச்சமுத்து மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் செய்திருந்தனர்.