பதிவு செய்த நாள்
10
பிப்
2015
01:02
மாம்பலம்: மேற்கு மாம்பலம் ஆதிசென்ன கேசவ பெருமாள் கோவிலில், மகா சம்ப்ரோட்சணம் நேற்று கோலாகலமாக நடந்தது.
மேற்கு மாம்பலம், கோவிந்தன் சாலையில் உள்ள பாஷ்யகார ஆதிசென்ன கேசவ பெருமாள் கோவிலில், நேற்று காலை 9:00 மணிக்கு, மகா சம்ப்ரோட்சணம் நடந்தது. இதையொட்டி, கடந்த ௬ம் தேதி முதல், யாக சாலை பூஜைகள், ஹோமம், சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடந்தன. நேற்று காலை 6:00 மணிக்கு, யாகசாலை நான்காம் கால ஹோமமும், 6:30 மணிக்கு, பிராயசித்த ஹோமமும், கேசவாதி ஹோமமும், மகா பூர்ணாஹுதியும், மகா கடங்கள் புறப்பாடும் நடந்தன. இதையடுத்து, காலை 9:30 மணிக்கு, மூலவர் விமானம், தாயார் விமானம், சன்னிதி விமானம், கொடிமரம் மற்றும் அனைத்து சன்னிதிகளுக்கும் மகா சம்ப்ரோட்சணம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.