திண்டுக்கல் : திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெப்ப திருவிழா நேற்று நடந்தது. ஜன., 20 ல் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. பிப்., 4 ல் பால்குடம் எடுத்தல், பூச்சொரிதல் விழா நடந்தது. பிப்., 5 மாலை 6 மணிக்கு முளைப்பாரி, பிப்., 6 இரவு மஞ்சள் நீராடி கரகம் தெப்பத்தில் விடப்படும் நிகழ்ச்சி நடந்தது. பிப்., 8 ல் ஊஞ்சல் உற்சவமும், பிப்., 9 ல்இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடந்தது.