Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமர் வணங்கிய சொர்ணபுரீஸ்வரர் ... மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் ஏழாம் ஆண்டு நிறைவு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2011
10:06

திருக்கோவிலூர் : திருவண்ணாமலை, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின் ஏழாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா, அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கிறது. திருவண்ணாமலை, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின் மகா கும்பாபிஷேக ஏழாம் ஆண்டு நிறைவு விழா, அடுத்த மாதம் 8, 9ம் தேதிகளில் நடக்கிறது. விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக, 8ம் தேதி காலை 6.30 மணிக்கு ஸ்ரீ நித்யானந்தகிரி சுவாமிகள் முன்னிலையில், ஸ்ரீ முரளீதர சுவாமிஜி நுழைவு வளைவு திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஜஸ்டிஸ் அருணாசலம் எழுதிய, "என் குருவின் புனித திருவடிகளில் என்ற ஆங்கில நூலின் இரண்டாம் பாகத்தை, நித்யானந்தகிரி சுவாமிகள் வெளியிட, முரளீதர சுவாமிகள் பெற்றுக் கொள்கிறார். தமிழ்ப் பதிப்பை முரளீதர சுவாமிகள் வெளியிட, நித்தியானந்தகிரி சுவாமிகள் பெற்றுக் கொள்கிறார். அன்னை விஜயலஷ்மி எழுதி, மூர்த்தி ஈஸ்வர அய்யா கன்னடத்தில் மொழிபெயர்த்த அன்பின் அலைகள் புத்தகத்தை, முரளீதர சுவாமிகள் வெளியிட, மூர்த்தி ஈஸ்வரன் பெற்றுக் கொள்கிறார். காலை 10.30 மணிக்கு பகவானுடன் பக்தர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. மாலை 3.30 மணிக்கு சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம், 5.15 மணிக்கு சிவகாசி பகவான் யோகி ராம்சுரத்குமார் சேவா டிரஸ்டைச் சேர்ந்த குழந்தைகளின் நாடகம், மாலை 6.30 மணிக்கு முரளீதர சுவாமிகளின் உபன்யாசம் நடக்கிறது. விழாவின் இரண்டாம் நாளான 9ம் தேதி காலை 7 மணிக்கு மகா அபிஷேகம், 11 மணிக்கு பக்தர்களின் பஜனை, காலை 4 மணி, மாலை 5.30 மணிக்கு ராம்ஜி பஜனை குழுவினரின் பஜனை, மாலை 6 மணிக்கு மதுரை ஸ்ரீமதி கோமதி குழுவினரின் வில்லுப்பாட்டு, இரவு 7.45 மணிக்கு பகவான் வெள்ளி ரதத்தில் உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜஸ்டிஸ் அருணாசலம் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar