கள்ளக்குறிச்சி: மகாசிவராத்திரி வைபவத்தையொட்டி காஞ்சி மாமுனிவர் திருவுருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி பூஜை நேற்று மாலை நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. சந்திரசேகர சுவாமிகள் திருவுருவ படத்திற்கு பூஜைகள் செய்து மகாவில்வம் சாற்றினர். காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வருக்கு நான்கு கால அபிஷேகங்கள் செய்தனர்.