Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேணுகோபால சுவாமி கோவிலில் மகா ... மயில் வாகனனுக்கு மாசி பிரம்மோற்சவம்! மயில் வாகனனுக்கு மாசி பிரம்மோற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விட்டல் ருக்மிணி கோயிலில் மார்ச் 2 முதல் தொடர்ந்து 101 நாட்கள் ஹோமம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2015
11:02

கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தானில் உலக நலன் வேண்டி தொடர்ச்சியாக 101 நாட்கள் நடைபெற உள்ள ஒரு கோடி புருஷஸூக்த ஹோமம் பூர்வாங்க பூஜைகள் மகாசிவராத்திரியான கடந்த 17ம் தேதி பாண்டுரங்கன் சன்னதியில் தொடங்கி யது. கோவிந்தபுரத்தில் தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் சுமார் 150 அடி உயர பிரமாண்டமான ருக்மிணி சமேத பாண் டுரங்கன் கோயில் உள்ளது.இங்கு பெரிய அளவிலான கோசாலையில் தெய்வ பசுக்கள் 500க்கும் மேற்பட்டவை வளர்க்கப்ப டுகிறது.

Default Image
Next News

இக்கோயிலில் வரும் மார்ச் 2ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரை தொடர்ந்து 101 நாட்கள் ஒரு கோடி புருஷஸூக்த ஹோமம் நடக்கிறது. புத்ர பாக்யம் வேண்டுபவர்களுக்கு நம்முடைய முன்னோர்களான ரிஷிகள் சொன்ன முக்கிய பரிகாரம் புருஷஸூ க்த ஹோமம். புத்ர பாக்யம் வேண்டுபவர்கள் ஒரு நாள் ஹோமத்தை சங்கல்பம் செய்து கொண்டு நடத்தினால் பகவானின் கிருபையால் புத்ர பாக்யம் ஏற்படும். விவாஹ ப்ராப்தியும், குடும்ப சேமமும் ஏற்படும். இந்த பாக்யத்தை அனைவரும் அடையும் வகையில் ஹோமத்தினை தரிசனம் செய்து பயனடைய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஹோமம் 2ம் தேதி முதல் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை 40க்கும் மேற்பட்ட வேத வித்துக்கள் மூலம் தொடர்ந்து 101 நாட்கள் நடத்தப்படுகிறது. இதற்காக தனியாக கோயில் எதிரே மிகப் பெரிய அளவில் ஹோமம் மண்டபம் அமைக்கப்படுகிறது.

இதற்கான பூர்வாங்க பூஜைகள் நடந்தது. இதில் 108 கடங் கள் அலங்கரிக்கப்பட்டு  பூஜைகள் நடந்தது. தொடர்ந்து தினகர் சர்மா தலைமையில் 20 வேத விற்பன்னர்களுடன் சிறப்பு ஹோமம் நடந்தது. சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த பூஜை மற்றும் ஹோமத்தில் சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராமதீட்சதர், கோயில் ஸ்தாபகர் பூஜ்யஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். உலக நலன் வேண்டி நடைபெறும் இந்த ஒரு கோடி புருஷஸூ க்த ஹோமத்தில் பங்கேற்க விரும்புவோர் 0435 .. 2472300, 93451 54953, 94433 95387 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் சர்வசக்தி விநாயகர் கோவிலில் முதலாமாண்டு பூர்த்தி சிறப்பு பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar