பதிவு செய்த நாள்
04
மார்
2015
12:03
விருத்தாசலம்: விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக தேரோட்டம் நடந்தது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம், 23ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து, நேற்று, தனித்தனியாக அலங்கரித்த தேரில், காலை, 6:00 மணியளவில் விநாயகர், 6:40 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத முருகர், 7:15 மணிக்கு, விருத்தகிரீஸ்வரர், 8:10 மணிக்கு, விருத்தாம்பிகை, 9:00 மணிக்கு, சண்டிகேஸ்வரர் சுவாமிகள், வீதியுலா வந்து அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேர்களை வடம் பிடித்து இழுத்து, நேர்த்திக் கடனை செலுத்தினர். பகல், 12:00 மணிக்கு, உச்சி கால பூஜை நடந்தன. இன்று, பகல், 12:00 மணியளவில் மணிமுக்தாற்றில் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம், நாளை இரவு, புதுப்பேட்டை அம்மன் குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கின்றன. வரும் 6ம் தேதி இரவு, சண்டிகேஸ்வரர் வீதியுலாவுடன், மாசி மக பிரம்மோற்சவம் முடிகிறது.