திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமகத் திருவிழா தேரோட்டம் நடந்தது.திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமகப் பெருவிழா துவங் கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது.
அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 8:30 மணிக்கு சிவானந்தவள்ளி சமேத வீரட்டானேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.நமச்சிவாயா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். முதலில் விநாயகர், இரண்டாவதாக வள்ளி தேவசேனா சமேத முருகர், நான்காவதாக அம்பாள், ஐந்தாவது சண்டிகேஸ்வரர்கள் என நான்கு தேர்களுக்கு மத்தியில் சிவானந்தவள்ளி சமேத வீரட்டானேஸ்வரர் எழுந்தருளிய மிகப்பெரிய சுவாமி தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.மாலை 4:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
ஐந்து தேர்கள் ஒருசேர அணிவகுக்க, கண்கொள்ளா இக்காட்சியை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடனும், வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.