திருப்பதி: திருமலையில் ஐந்து மணி நேரம் கோயில் முழுவதையும் முழுமையாக சுத்தம் செய்யும் பணி திருமலை கோயிலில் நடந்தது. ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படும் இந்த சுத்தம் செய்யும் நிகழ்வு வருடத்திற்கு நான்கு முறை நடைபெறும். பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதேசி,ஆனிவார ஆஸ்தானம் மற்றும் உகாதி பண்டிகையை முன்னிட்டு இப்படி கோயில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். வருகின்ற 21ந்தேதி உகாதி தெலுங்கு வருடப்பிறப்பு வருவதை முன்னிட்டு இப்போது கோயில் சுத்தம் செய்யப்பட்டது. கோயில் ஊழியர்கள் அனைவரும் இதில் ஈடுபட்டு கோயில் முழுவதையும் சுத்தம் செய்தனர் மேலும் சின்ன சின்ன பராமரிப்பு வேலைகளையும் செய்து முடித்தனர். இதற்காக ஐந்து மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு பின் தொடரப்பட்டது.