திருப்பதி: திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திற்கு உள்பட்ட திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கோதண்டராமசுவாமியின் பக்தர்களான வெங்கடேஸ்வரன்–உதயலட்சுமி தம்பதிகள் சுவாமிக்கு தங்க காதணி மற்றும் தங்க மூலம் பூசப்பட்ட கீரீடம், ஹஸ்தம் உள்ளீட்ட 21 ஆபரணங்களை உபயமாக வழங்கியுள்ளனர்.