திருப்பதி: யுகாதி எனப்படும் தெலுங்கு வருட பிறப்பை கொண்டாட திருமலை சீனிவாசப்பெருமாள் கோவில் தயராகிவருகிறது. விழாவினை முன்னிட்டு கோயில் முழுவதும் அலங்கார வேலைகள் நடந்து வருகிறது. தெலுங்கு வருட பிறப்பான நாளை (21ம் தேதி) காலை 7 மணி முதல் சுவாமி புறப்பாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்காகவே திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்றுள்ளனர்.