Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தில்லைக் காளி அம்மன் கோவிலில் ... திருப்புவனம் பங்குனி விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்! திருப்புவனம் பங்குனி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உறையூர் வெக்காளியம்மன்கோவில் பூச்சொரிதல் விழா!
எழுத்தின் அளவு:
உறையூர் வெக்காளியம்மன்கோவில் பூச்சொரிதல் விழா!

பதிவு செய்த நாள்

21 மார்
2015
12:03

திருச்சி: திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் நேற்று, பூச்சொரிதல் விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர். திருச்சி உறையூரில் பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. சோழ மன்னர்களின் குல தெய்வமாகவும், திருச்சி நகரின் காவல் தெய்வமாகவும் விளங்கி வரும் இந்த கோவிலில், அம்மனின் மூலஸ்தானத்திற்கு மேற்கூரை கிடையாது. காற்று, மழை, வெயில் உட்பட அனைத்து இடர்பாடுகளையும் தானே தாங்கிக் கொண்டு, மக்களை காத்து வருவதாக ஐதீகம். இந்த கோவிலில் ஆண்டு தோறும் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடக்கும். அதன்படி, இந்தாண்டு வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு கோயில் நிர்வாகம் சார்பில், முதல் பூக்கூடை மேளதாளத்துடன் யானைகள் புடை சூழ, வீதி உலாவாக எடுத்து வரப்பட்டது.கோயில் உதவி கமிஷனர் ஜெயப்பிரியா, அர்ச்சகர் மார்க்கண்டர் மற்றும் கோவில் பணியார்கள், அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்து, பூச்சொரிதலை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் வந்து, தாங்கள் கொண்டு வந்த பூக்களால், அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.திருச்சியை சுற்றி பல்வேறு பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட அலங்கார வண்டிகளில் டன் கணக்கில் பூக்கள் கொண்டுவரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அம்மனை தரிசிக்க வசதியாக நேற்று விடிய, விடிய நடை திறந்திருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar