Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷீரடி சாய்பாபா கோவில் ஏப்., 1 முதல் ... வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை! வில்லியனூர் திருக்காமீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி விழாவிற்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது!
எழுத்தின் அளவு:
பங்குனி விழாவிற்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது!

பதிவு செய்த நாள்

25 மார்
2015
10:03

சபரிமலை: பத்து நாள் பங்குனி உத்திர விழாவிற்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று காலை கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் நாளில் ஆராட்டு நடைபெறும் வகையில் சபரிமலையில் பத்து நாட்கள் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதற்காக சபரிமலை நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறந்தது. மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இதில் சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு, நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கலந்து கொண்டனர். இன்று காலை நடைபெறும் கொடியேற்று விழாவுக்கான கொடிப்பட்டம் கோயில் திருநடையில் சமர்ப்பிக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று காலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்யதரிசனத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் நடைபெறும். காலை ஒன்பது மணிக்கு கொடிப்பட்டத்துக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜை நடத்திய பின்னர், மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி பவனியாக எடுத்து வரப்படும். 10 மணிக்கு மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றுவார். இன்று ஒன்றாம் நாள் விழா முதல் ஏப்., இரண்டாம் தேதி ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் இரவு 10 மணிக்கு ஸ்ரீபூதபலி என்னும் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை இரண்டாம் நாள் விழா முதல் ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் பகல் 12.30 மணிக்கு உற்சவபலி நடைபெறும். ஒன்பதாம் நாள் நள்ளிரவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். ஏப்., மூன்றாம் தேதி மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar