பூண்டி வெள்ளியங்கிரி கோவில் தேரோட்டம்: 29ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2015 05:03
பேரூர்: கோவை பூண்டி வெள்ளியங்கிரி கோவிலின் பங்குனி உத்திரத்தேர் திருவிழா 29ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில். இக்கோவிலில், ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கோவையின் பழமையான கோவில்களில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலும் ஒன்று. ஆண்டுதோறும் இக்கோவிலில், பங்குனி உத்திரத்தேர் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல், இந்த ஆண்டும் பங்குனி உத்திரத்தேர் திருவிழா 29ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடி ஏற்றத்திற்கு பிறகு, நான்கு நாட்களும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் செய்யப்பட்டு, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஐந்தாவது நாளான, மார்ச் மூன்றாம் தேதி மாலை, 5:00 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதியையொட்டி இக்கோவில், அமைந்துள்ளதால், வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.