Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோ.குப்பம் கிராமத்தில் கோவில் ... கண்டாச்சிபுரம் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன்! கண்டாச்சிபுரம் கோவிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திர விழா: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!
எழுத்தின் அளவு:
கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திர விழா: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!

பதிவு செய்த நாள்

04 ஏப்
2015
12:04

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த 25ம் தேதி துவங்கியது. தினமும் சித்தி  விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பல்லக்கில் உட்பிகார வலம் வரும் நிகழ்ச்சி, இரவு மயில், குதிரை, யானை  வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்று காலை கொளஞ்சியப்பர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர்,  பன்னீர், தேன், விபூதி, பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விநாயகர், கொளஞ்சியப்பர்  சுவாமிகள் விருத்தாசலம் சென்று, அங்கிருந்து பால்குடம், காவடி ஊர்வலத்துடன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை மணவாளநல்லூர்  மணிமுக்தாற்றில் தீர்த்தவாரி, வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. எஸ்.பி., ராதிகா மற்றும் விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள  பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிற்பகல் 1:30 மணிக்கு மேல் மணிமுக்தாற்றிலிருந்து பால்குடம்,  காவடி சுமந்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட  போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கேமராவில் கண்காணிப்பு: கொளஞ்சியப்பர் கோவிலில், சுவாமி சன்னதி, உட்பிரகாரம், வெளி பிரகாரம், கோபுர வாசல்கள் உட்பட 13 இடங்களில்  கேமரா பொறுத்தி கண்காணிக்கப்பட்டது. சேலம் மார்க்கமாக வந்து செல்லும் இரு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும்  புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, மணலூர் ரயில்வே மேம்பாலம் பகுதி ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல்,  விருத்தகிரிக்குப்பம் முருகர் சுவாமி கோவில், குப்பநத்தம் சுப்ரமணியர் சுவாமி கோவிலுக்கு மணிமுக்தாற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி  சுமந்து ஊர்வலமாக சென்று, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar