லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2015 11:04
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர், கனகவல்லி தாயார் சமேத லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு, காலையில், பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலையில், ராமச்சந்திரமூர்த்தி–சீதா தேவி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. விழாவில் சொரப்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.