Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை திறப்பு: ஏப்.,15ல் விஷூ ... சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் 10,008 பழக்காப்பு அலங்காரம்! சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி திருக்கல்யாணம்: ஹெலிகாப்டரில் மலர் தூவ ஏற்பாடு!
எழுத்தின் அளவு:
மீனாட்சி திருக்கல்யாணம்: ஹெலிகாப்டரில் மலர் தூவ ஏற்பாடு!

பதிவு செய்த நாள்

10 ஏப்
2015
10:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்., 30 காலை 9 முதல் 9.30 மணிக்குள் நடக்கிறது. அப்போது கோயிலுக்கு மேல் தாழ்வாக வட்டமடிக்கும் ஹெலிகாப்டரில் இருந்து பக்தர்கள் மீது மலர் தூவவும், பன்னீர் தெளிக்கவும் ஏற்பாடு நடக்கிறது.கோயில் மாநகர் மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்.,21 காலை 11 முதல் 12 மணிக்குள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்.,30 காலை 9 முதல் 9.30 மணிக்குள் கோயில் உட்பிரகாரத்தில் மேல, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் நடக்கிறது.

தோட்டக்கலைத்துறை மூலம் ஊட்டி யில் இருந்து ஐந்து லட்சம் எண்ணிக்கை யில் பூக்கள் வரவழைக்கப்பட்டு திருக்கல்யாண மணமேடை அலங்கரிக்கப்பட உள்ளது. இதற்காக பந்தல் அலங்கார வல்லுனர்கள் வரவுள்ளனர்.திருக்கல்யாணம் நடக்கும் போது கோயிலுக்கு மேல் ஹெலிகாப்டரில் இருந்து பக்தர்கள் மீது மலர் தூவவும், பன்னீர் தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக தனியார் சிலர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி கோரி உள்ளனர். தனியார் அமைப்பு மூலம் திருக்கல்யாண அறுசுவை விருந்து சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படுகிறது. திருக்கல்யாணத்தை நேரடியாக பார்க்க வசதியாக மேல, வடக்கு ஆடி வீதிகளில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட உள்ளது. இங்கு வி.ஐ.பி.,க்கள், உபயதாரர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும்.கோயில் உள்ளேயும், வெளியிலும் 12 இடங்களில் மெகா சைஸ் டிஜிட்டல் டிவிக்கள் பொருத்தப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஐப்பசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar