நீங்கள் பல சோதனைகளை அனுபவிக்கிறீர்களா?இறைவனிடம் முறையிட்டும், தொழுதும் பயனில்லையே என தவிக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் அவனது கோபத்திற்கு ஆளாகிவிட்டீர்கள் என்று பொருள்.நிச்சயமாக அல்லாஹ் ரோஷமுள்ளவன். அவன் எதனை விலக்கி உள்ளானோ, அதனை மனிதன் செய்யும் போது ரோஷம் அடைகின்றான், என்றுநபிகள் நாயகம் சொல்கிறார்.இறைவனால் விலக்கப்பட்டதில் முக்கிய இடம் வகிப்பது பொய். யாரொருவன் பொய்சொல்கிறானோ, அவன்நிச்சயமாக இறைவன் தரும் சோதனைகளை கடுமையாக அனுபவித்துக் கொண்டுஇருப்பான்.ஜனங்களை சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்பவனுக்கு கூட கேடு விளையட்டும், அவன்நாசமாகட்டும் என்று சாபம் கொடுக்கிறார் நபிகளார். உண்மையின்பெருமையை விளக்க அவர் தந்த கருத்துக்கள் இதோ!
* உண்மை பேசுவது மனிதனை நன்மையின் பக்கம் இழுத்துச் செல்கிறது. நன்மை சொர்க்கத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறது. நிச்சயமாக ஒருவன் உண்மையே பேசிக்கொண்டுஇருந்தால், இறைவனிடத்தில் சித்தீக் (உண்மையாளர்) என்று எழுதப்பட்டு விடும். * பொய் சொல்வது மனிதனை பாவங்களின் பக்கம் இழுத்துச் செல்கிறது. பாவங்கள் அவனை நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறது. * ஒரு மனிதன் ஒரு பொய்யைச் சொன்னால் அந்தப் பொய்யின் வாசனை வானவர்களை ஒரு மைலுக்கு அப்பால் நிறுத்தி விடுகிறது. (இறைவனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் வானவர்கள் மூலம் நமக்கு வரும். பொய் பேசுபவர்களால் அந்த நன்மையை அடைய முடியாது) * நீங்கள் உண்மை பேசுவதைக் கடைபிடிப்பீர்களாக! ஏனென்றால், அது சொர்க்கத்து வாசல்களில் ஒன்றாகும். நீங்கள் பொய்பேசுவதைப் பற்றி எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது நரக வாசல்களில் ஒன்றாகும். பொய் பேசும் வழக்கத்தை இனியாவது விடுவோமா!