தூத்துக்குடி - திருநெல்வேலி நான்குவழிச் சாலை முறப்பநாட்டில் உள்ள கைலாசநாதர் - சிவகாமி அம்பாள் கோயில் குரு ஸ்தலமாகத் திகழ்கிறது. இத்தலத்தில், முற்காலத்தில் நந்திபகவான் குதிரை முகத்துடன் காட்சி அளித்தார் என்று கூறப்படுகிறது. இக்கோயிலில் காலபைரவரும், வீரபைரவரும் இணைந்தே இருப்பது சிறப்பம்சம். குரு பகவானாக எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்கினால். வாழ்வில் குறைகள், பிணிகள் நீங்கி சகல செல்வங்களும் கிடைக்கும். தீராத பாவங்கள் தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். என்பது ஐதீகம்.