பதிவு செய்த நாள்
22
ஏப்
2015
01:04
புதுச்சேரி: வழுதாவூர் வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.
புதுச்சேரி-திருக்கனுார் சாலை, வழுதாவூர் கலிங்கமலை கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள், ரங்கநாதப் பெருமாள், முத்துமாரியம்மன், சென்னுார் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 18ம் தேதி கோமாதா பூஜை, மகா சுதர்சன ஹோமத்துடன் துவங்கியது.
கடந்த 19 ம் தேதி காப்பு கட்டுதல், யாகசாலை பூஜை, முதல் கால ஹோமங்கள் நடந்தது. 20ம்
தேதி 3ம் கால யாக பூஜைகள், உற்சவ மூர்த்திகளுக்கு 81 கலச திருமஞ்சனம் நடந்தது. நேற்று
(21ம் தேதி) 5ம் கால யாகசாலை ஹோமங்கள், அஷ்ட பந்தனம் சாத்துதல், கஜபூஜை,
லட்சுமிநாராயண பூஜை நடந்தது.
இன்று (22ம் தேதி) காலை 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 9:16 மணிக்கு யாத்ரா தானம்,
கடங்கள் புறப்பாடும், 9:36 மணிக்கு விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10:26 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7:00 மணிக்கு கருடசேவை வீதி உலா நடக்கிறது.