ஊத்துக்கோட்டை: ராதா - ருக்மணி சமேத சந்தான கிருஷ்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று (22ம் தேதி) நடைபெற உள்ளது.
ஊத்துக்கோட்டை மதனஞ்சேரி கிராமத்தில் உள்ள ராதா - ருக்மணி சமேத சந்தான கிருஷ்ண பெருமாள் கோவிலில். இன்று (22ம் தேதி) கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று (22ம் தேதி) காலை, 8:00 மணிக்கு கோ பூஜை, யாகசாலை பூஜைகள் துவக்கம், காலை, 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கும்பகலசம் கோவிலை வலம் வருதல், ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடைபெறும். பின், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.