பதிவு செய்த நாள்
22
ஏப்
2015
02:04
பெரம்பலூர்:பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் பூச்சொரிதல்
விழா, நேற்று இரவு நடந்தது.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிறுவாச்சூர்
மதுரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று இரவு, பூச்சொரிதல் விழா
நடந்தது.நேற்று காலை, 11 மணிக்கு மூலவர் அபிஷேகமும், மதியம், 1 மணிக்கு உச்சிகால
பூஜையும், இரவு, 11 மணியிலிருந்து இன்று காலை, 10 மணி வரை பூச்சொரிதல் விழா
நடந்தது.விழாவையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து,
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு, பூக்கள் கொண்டு செல்லப்பட்டு, பூச்சொரிதல் விழா நடந்தது.வரும், 28ம் தேதி காப்புக்கட்டுதலுடன், சித்திரை திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து, மே, 6ம் தேதி வரை, பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 6ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
மே, 7ம் தேதி காலை, 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. 8ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 9ம் தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலாவும், 11ம்தேதி மஞ்சள் நீருடன் விழா நிறைவு பெறுகிறது.பெரம்பலூர்- துறைமங்கலம் அரசு ஊழியர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மனுக்கு பூச்சாத்தப்பட்டது. இதையொட்டி இன்னிசை நிகழ்ச்சியும், மதியம் அன்னதானமும் நடந்தது.இதற்கான ஏற்பாடுகளை துறைமங்கலம் அரசு ஊழியர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பால்ராஜ், ஜவஹர்லால் நேரு, பாரதி, சரவணன், வேல்முருகன் உட்பட பலர் செய்தனர்.