ஆலங்குடி:ஆலங்குடி அங்காள பரமேஸ்வரி, மாசாணி அம்மன் கோவிலில் நவசண்டிஹோமம், வருடாபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.விழாவையொட்டி வினாயகர், அங்காளபரமேஸ்வரி, மாசாணிஅம்மன், முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.தொடர்ந்து நவசண்டிஹோமம், வருடாபிஷேகம், அலங்கார ரதத்தில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன. கோவிலில் அன்னதானம் நடந்தது. விழாவையொட்டி அம்பாள் ஊஞ்சல், திருவிளக்கு பூஜை நடந்தது.