Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமர்நாத் யாத்திரை மழையால் நிறுத்தம்! அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலைநிகழ்ச்சி துவக்கம்! அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
500 ஆண்டுகளுக்கு முந்தைய வீரக்கல் சிலை கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2011
10:07

வேலூர்: வேலூர் அருகே, 500 ஆண்டுகளுக்கு முந்தைய வீரக்கல் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தவாடி கிராமத்தல் விவசாயி காசிநாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சீர்செய்த போது கற்சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலை, 130 செ.மீ., உயரமும், 49 செ.மீ., அகலமும், 22 செ.மீ., கனமும் கொண்ட இந்த கற்சிலை, 500 ஆண்டுகளுக்கு முந்தைய வீரக்கல் என தெரிந்தது. இதையடுத்து வேலூர் மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவுபடி இந்த சிலை வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

அருங்காட்சிய காப்பாட்சியாளர் சரவணன் கூறியது: இந்த கற்சிலை வீரக்கல் சிலையாகும். நாயக்கர் மன்னர் ஆட்சி காலத்தில் வீரமாக போரிட்டு உயிர் நீத்த படைத் தலைவனுக்காக செதுக்கப்பட்டிருக்கலாம். படைத்தலைவன் தன் மனைவியுடன் நின்ற நிலையில் சிலையில் காணப்படுகின்றது. படைத்தலைவன் வலது கையில் கத்தியுடனும், இடது கையில் வில்லுடனும் காணப்படுகின்றார். நாயக்க மன்னர்களுக்கான அழகான கொண்டையுடன் உள்ளார். அனரது மனைவி வலது கையில் மலரையும், இடது கையை தொங்கவிட்டபடியும், அழகிய ஆடை ஆபரணங்களுடன் சிலை உள்ளது. புடைப்பு சிற்பமாக காணப்படும் இந்த சிலை, 500 ஆண்டுகள் பழமையானது. நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தை சேர்ந்தது. கி.பி., 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. இந்த சிலை தற்போது வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பொது மக்கள் பார்வைக்குவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar