Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் மண்ணாடிமங்கலத்தில் ... ஹர ஹர சங்கரா... சிவ சிவ சங்கரா...: பக்திக் கடலில் நீந்தியது மீனாட்சி தேர்: பக்தர்கள் பரவசம்! ஹர ஹர சங்கரா... சிவ சிவ சங்கரா...: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2015
10:05

சிதம்பரம்: சிதம்பரம், நடராஜர் கோவில் மகா கும்பாபிஷேகம், (1.5.2015) அன்று நடந்தது. திரளான பக்தர்கள், தில்லைக் கூத்தனே; பொன்னம்பலத்தானே என, விண்ணை முட்டும் வகையில், பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

Default Image
Next News

யாகசாலை பூஜைகள்: சிதம்பரம், நடராஜர் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில், ஆகாய ஸ்தலமாக உள்ளது. இங்கு, 27 ஆண்டுகளுக்குப்பின், 40 கோடி ரூபாய் செலவில், திருப்பணி நடந்தது. பணிகள் முடிந்து, கடந்த மாதம், 25ம் தேதி, யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, 30ம் தேதி வரை, 12 கால யாகசாலை பூஜைகள் நடந்தன. 1.5.2015 அன்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, தேவசபையில் நடராஜருக்கு பழைய பொன் ஆபரணங்களை அணிவித்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின், சிவகாமி அம்மன் உடனுறை நடராஜப் பெருமான், தேவசபையில் இருந்து, சித்சபைக்கு எழுந்தருளினார். 1.5.2015 அதிகாலை, 4:00 மணிக்கு, யாக சாலையில், தம்பதி பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை உள்ளிட்ட, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின், மேள தாளங்களுடன் கோபுரங்களுக்கு கடம் புறப்பாடானது. நேற்று காலை, 8:00 மணிக்கு, சித்சபை, கனகசபை, நான்கு ராஜகோபுரங்கள் உட்பட, ஏழு இடங்களிலும், ஒரே நேரத்தில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. குருமூர்த்தி தீட்சிதர் தலைமையில், தீட்சிதர்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றினர்.

தீபாராதனை: இதைத் தொடர்ந்து, கலசங்களுக்கு வஸ்திரம், பூமாலை அணிவித்து, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அரோஹரா கோஷம் எழுப்பினர். தில்லைக் கூத்தனே; பொன்னம்பலத்தானே என்ற பக்தி கோஷம், விண்ணை முட்டியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar