Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் ... கோபி முத்துமாரியம்மனுக்கு இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் கிரிவலம்: பக்தர் வழிபாடு!
எழுத்தின் அளவு:
அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் கிரிவலம்: பக்தர் வழிபாடு!

பதிவு செய்த நாள்

04 மே
2015
12:05

திருச்செங்கோடு : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நடந்த கிரிவலத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். திருச்செங்கோடு அர்த்நாரீஸ்வரர் மலைக்கோவில், வரலாற்று சிறப்பும், இதிகாசம் மற்றும் புராண சிறப்பும் கொண்ட ஸ்தலமாகும். தீர்த்தம், மூர்த்தி ஆகிய சிறப்புகளையும் கொண்டது. இங்கு, அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.மலைக்கோவிலில், ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து ஸ்வாமியை வழிபட்டு செல்வது வழக்கம். கிரிவலப்பாதை, ஆறு கி.மீ., தூரம் கொண்டது. கிரிவலம் செல்லும் பக்தர்கள், ஆறுமுக ஸ்வாமி கோவிலில் துவங்கி, பெரிய ஓங்காளியம்மன் கோவில், நாமக்கல் சாலை, மலைசுத்தி சாலை, வாலரைகேட், ப.வேலூர் சாலை, சின்ன ஓங்காளியம்மன் கோவில், தெற்கு ரதவீதி வழியாக மீண்டும் ஆறுமுக ஸ்வாமி கோவிலை வந்தடைவர்.

ஆறு கி.மீ., கிரிவலப்பாதையில் உள்ள பல்வேறு கோவில்களில், பக்தர்களுக்கு சுக்கு காப்பி, பழங்கள், ஜூஸ், பொங்கல், புளியோதரை, லெமன் மற்றும் தேங்காய் சாதம் உள்ளிட்ட கலவை சாதங்கள், பல்வேறு அமைப்பினர் சார்பில், பிரசாதமாக வழங்கப்பட்டது.அதில், நாமக்கல், ஈரோடு, சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கிரிவலம் சென்று ஸ்வாமியை வழிபட்டனர்.

* நாமக்கல் அடுத்த, புதன்சந்தை சிவன்மலையில் உள்ள கடம்பலேஸ்வரர் கோவிலில், மூலவருக்கு தீர்த்த நீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, கோவிலில் உள்ள கணபதி, முருகன், இடும்பன், சின்னண்ணன், பெரியண்ணன், கருமாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பூஜை செய்யப்பட்டது.மாலை, 6 மணிக்கு, மலையை சுற்றி, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar