புதுச்சேரி: மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, காலை முதல் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை நடந்த திருவிளக்கு பூஜையில், பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஜனார்த்தனன் செய்திருந்தார்.