Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பம் கவுமாரியம்மன் திருவிழா: அலை ... துடைப்பத்தால் அடித்து மச்சான்கள் நேர்த்திக்கடன்! துடைப்பத்தால் அடித்து மச்சான்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2015
11:05

திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம், கூத்தாண்டவர் கோவிலில், சித்திரைப் பெருவிழா தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. விழுப்புரம் மாவட்டம், கூவாகம், கூத்தாண்டவர் கோவில் சித்திரைப் பெருவிழா, கடந்த மாதம் 21ம் தேதி துவங்கியது. முக்கிய உற்சவமான, திருநங்கையர் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஆயிரக்கணக்கான திருநங்கையர், பூஜாரிகளின் கையால் தாலி கட்டிக்கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, அரவாண் சிரசுக்கு திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Default Image
Next News

கீரிமேட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட புஜம் மற்றும் மார்பு, நத்தம் கிராமத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கை மற்றும் கால்களை, 21 அடி உயர தேரில் பொருத்தினர். பின், சிவலிங்க குளம் கிராமத்திலிருந்து, குடை கொண்டு வரப்பட்டு, காலை, 8:05 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கான திருநங்கையர் மற்றும் பொதுமக்கள் தேரை இழுத்துச் சென்றனர். தேர் செல்லும் பாதையில், திருநங்கையர், 108 தேங்காய்கள் வைத்தும், குவியல் குவியலாக கற்பூரங்களை ஏற்றியும் கும்மியடித்தனர். விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களையும், சில்லறை காசுகளையும் சுவாமி மீது வீசினர். பந்தலடியை தேர் சென்றடைந்ததும், அங்கு நடந்த அழுகளம் நிகழ்ச்சியில், திருநங்கையர், தாங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்து, விதவைக் கோலம் பூண்டு, ஒப்பாரி வைத்தனர். சிலர், தங்கம் மற்றும் வெள்ளித் தாலிகளை காணிக்கையாக செலுத்தினர். பின், அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து விட்டு, தங்கள் ஊருக்கு திரும்பினர். இதைதொடர்ந்து, உறுமைசோறு (பலிசாதம்) படையல் மாலையில் நடந்தது. இதை வாங்கி சாப்பிட்டால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதால், பக்தர்கள் முண்டியடித்து வாங்கினர். இரவு, 7:00 மணிக்கு, காளிக் கோவிலில் அரவாண் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிரசு மட்டும் பந்தலடிக்கு கொண்டு வரப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கங்கை நீரை சாதுக்கள் ... மேலும்
 
temple news
கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ ஆபத்சஹாய ... மேலும்
 
temple news
புதுச்சேரி; குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட ... மேலும்
 
temple news
நாகர்கோவில்;சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar