Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருதய ஆண்டவர்தேவாலய திருவிழா! காரைக்கால் ராஜசோளீச்சுரர் கோவில் சிம்ம வாகனம் வெள்ளோட்டம்! காரைக்கால் ராஜசோளீச்சுரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி உற்சவ பெருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2015
05:06

உணவு பஞ்சமின்றி, விவசாயம் செழிக்க காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி உற்சவ பெருவிழா நடந்தது.

Default Image
Next News

காரைக்காலில் பழங்காலத்தில் திருத்தெளிச்சேரி என்று அழைக்கப்பட்ட கோவில்பத்துவில், பல நூறு ஆண்டுகளுக்கு முன் நீண்டகாலமாக மழை இல்லாததால் மக்கள் வறுமையில் வாடினர். பயிர்கள் விளைச்சல் இன்றி நலிந்து உணவு பஞ்சம் ஏற்பட்டு உயிரினங்கள் இறக்க நேர்ந்தாகவும், இதை கண்ட சிவபெருமான் உழவனாக தோன்றி நிலத்தை உழுது விதை தெளித்ததாகவுமும், அன்று முதல் உணவு பஞ்சம் இன்றி மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது.

சிவபெருமானே உழவராக வந்து நிலத்தை உழுது விதை தெளித்தால் இவ்வூர் திருத்தெளிச்சேரி என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி உற்சவம் நடந்து வருகிறது. அதன்படி, விவசாயம் மேன்மை பெறவும், உணவு பஞ்சமின்றி மக்கள் வாழவும் நேற்று விதை தெளி உற்சவ பெருவிழா நடந்தது. நேற்று காலை 6.45 மணிக்கு கோவிலின் எதிரே உள்ள குளக்கரையில், பார்வதீஸ்வரர் சுயம்வரதபஸ்வினி சமேதராக எழுந்தருளினார். அங்கு, சிறப்பு பூஜைகள் செய்து நிலம் உழுது விதை தெளிக்கும் உற்சவ விழா நடந்தது.இந்நிகழ்ச்சியில் நகரமைப்புக்குழு தலைவர் கோவிந்தராஜ், தனி அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விதை தெளித்து சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து சாமி வீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar