நர ஆன்மா ஒன்று. தான் பெற்ற தபோபலத்தால் ருத்ர அம்சம் கொண்ட சாரூபநிலைப் பதமே, ஈசான்யன் என்பது. சிவனால் வடகிழக்குத் திசைக் காவலர். அந்தஸ்துப் பெற்ற பின்பு. திக்குப்பாலகர் என்று அழைக்கப்படலானார். சதாசிவ மூர்த்தத்திறன். ஊர்த்துவமுகமும் ஈசான்யம் என்றே சொல்லப்படும். அது உலக சிருஷ்டியின் நிமித்தம். சிவன் எடுத்துக் கொண்ட பஞ்சத் திருமேனிகளில் ஒன்று. அன்பர்கள். இரு ஈசான்யர்களுக்குமான வேறுபாட்டினைத் தெரிந்து கொள்ளல், புரிந்து கொள்ளல் அவசியம். திசைக்காவலரான ஈசான்யரின் வாகனமும் ரிஷபமே. ஆனால் இந்த ரிஷபம் பிரம்ம, விஷ்ணு, தர்ம தேவதா அம்சம் கொண்டதல்ல. சாதாரணக் காளையே. ஆயுதமும் சூலாயுதமே. ஆனால், இது சாதாரண ஆயுதமே. மந்திர ஆற்றல் உடையதல்ல. இவர் சந்திரனையொத்த வெண்மை நிறத்தர். இவரது தேவியின் பெயர் ஹர்சினி என்பது. முக்கண் உடைய மூர்த்திகளில் இவரும் ஒருவர். அபயவரத கரங்களுடன் ஒரு கையில் பாசமும் தாங்கி இருப்பார்.
சுக்லபட்ச பிரதமை முதல் பூரணை வரையில் தினந்தோறும் எண்ணாயிரம் மலர் கொண்டு பூசனை செய்தவன். சாரூப நிலை பெறுவான். (சிவ மகா புராணம், இரண்டாம் பாகம் 157 ஆம் பக்கம்). இவனைத் தொழுதால் மரண பயம் போகும். நீண்ட ஆயுள் கிட்டும். தொழுது உய்வார்களாகுக.