ஒரு நாளில் ஐந்து சிவாலயங்களை தரிசிக்க அடியார்களுடன் ஒரு தீபாவளி நாளில் புறப்பட்டார் திருஞானசம்பந்தர். திருக்கருகாவூர், அவனிவநல்லுõர், அரித்துவார மங்கலம், ஆலங்குடி, திருக்கொளம்பூதுõர் ஆகிய ஐந்து தலங்களையும் ஐந்து கால பூஜையில் தரிசிப்பது இதன் நோக்கம். முதல் நான்கு தலங்களையும் தரிசித்து இறுதியாக அர்த்தசாம பூஜையில் திருக்கொளம்பூதுõர் ஈசனை தரிசிக்க சம்பந்தர் வரும்போது, முள்ளியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. படகை செலுத்த முடியாத நிலை. சம்பந்தர் பதிகம் பாடியபடி படகைச் செலுத்தச் சொன்னார். ஈசனின் அருளால் ஒருவாறு அக்கரையை அடைந்தனர். என்றாலும் கோயில் சென்று இறைவனை தரிசிக்கும்போது, அர்த்தசாம பூஜை நேரம் கடந்து அதிகாலை ஆகிவிட்டது. எனினும் சம்பந்தருக்காக அர்த்தசாம பூஜையை அதிகாலைப் பூஜையாகச் செய்தனர்.
இந்த நிகழ்வை விளக்கும் வைபவம் இன்றும் அங்கு நடைபெறுகிறது. தீபாவளியன்று இரவு சம்பந்தர் சிலையைப் படகில் வைத்து அழைத்துச் செல்வர். அக்கரை அடைந்ததும் ஈசன் எதிர்கொண்டழைப்பார். பிறகு இருவரும் கோயில் சேர பூஜைகள் நடக்கும். சொல்லி வைத்தாற்போல அன்றைய தினம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும். தீபாவளிக்கு அடுத்த நாள் மட்டுமே இப்படி காலம் தவறி நடக்கும் பூஜையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர்.